பிரபாகரனின் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்ட இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். திருகோணமலையை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 24 வயது இளைஞனே கைது  செய்யப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்